பா.ஜ.க எம்.பி வருண் காந்தி பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜ.க நிலைப்பாட்டிற்கு மாறாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்று செயலாகும். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை அல்லது பகுதி அளவுக்கு நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்ற இலவசங்கள் அளிப்பதன் மூலமாக மக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது எல்லா அரசியல் கட்சிகளுமே இலவசம் அளித்து வருகிறது. அதன் மூலமாக இலவசங்கள் பெறுவது உரிமை எனும் மனநிலை ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து “தொட்டில் முதல் கல்லறை வரை” இலவசங்களை அளிக்கும் மாநிலத்தை உருவாக்கி வருகிறது. அதே நேரம் வாக்குறுதிகள் மற்றும் எல்லா திட்டங்களையும் இலவசமாக கருத முடியாது. அதற்கு உதாரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை அப்படி கூற முடியாது. மேலும் அது மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இலவசங்களை அளிப்பதற்கான நிதி ஆதாரம் குறித்து  மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறுவதை கட்டாயமாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.