புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த டிசம்பர் 6ஆம் தேதி 13 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.