வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.

தென் மாவட்ட பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து நிவாரணம் கோரியிருந்தார். அதனை தொடர்ந்து சென்னைக்கு வந்து  அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்திய பின், தற்போது தூத்துக்குடிக்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பின் நிவாரண உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்..