மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கி வருகிறது. சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 21 லட்சம் குடும்பத்திற்கு பணம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 லட்சம் பேர் புதிதாக நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களுக்கு பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது