தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் தேங்கியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேரை மீட்ட மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும்படி அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

உவரி, கூத்தங்குளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 400 மீனவர்கள், தங்களது சொந்த படகுகள் மூலம் மக்களை மீட்டு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். இதை பாராட்டிய அண்ணாமலை, மீனவர்களுக்கான எரிபொருள் செலவு, படகுகள் பழுதுபார்க்கும் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்