ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார் . கீழக்கரை திருபுத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கல நாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அதனை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.