மக்களவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள ஏழு பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலைக் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத், கரூர் – ஜோதிமணி, கடலூர் – விஷ்ணுபிரசாத், சிவகங்கை – கார்த்தி சிதம்பரம், விருதுநகர் – மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி – விஜய் வசந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.