தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாழும் ஓபிசி மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம், நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று ஓபிசி உரிமைக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஓ பி சி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்த வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.