உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், போட்டியில் தோல்வியை தழுவிய ஒரு அணியின் வீரர்களை சந்தித்து உத்வேகம் கொடுத்த ஒரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததேயில்லை.

நம்முடைய வீரர்களுக்கு ஊக்கமளித்து ஆதரவு தந்தது பிரதமர் மோடியின் சிறப்பான அணுகுமுறை. இது அடுத்த உலகக்கோப்பையில் நம்முடைய வீரர்கள் சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.