மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹரிநாராயண்பூரைச் சேர்ந்தவர் பரிமாள் பைத்யா (38). இவருடைய மனைவி அபர்ணா (35) இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. அபர்ணாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு இவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதன் காரணமாக இவர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டது. ரீல்ஸ் வெளியிடுவதன் மூலம் பல ஆண் நண்பர்களுடன் அபர்ணா பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த கணவர், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.