தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி இன்று பல இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி திருப்பதிக்கு நாளை இரவு 7 மணிக்கு செல்கிறார். இரவு ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள் 27ம் தேதி காலை சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

இதனால் அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.