தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 25 இன்று மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 81 ஆயிரத்து 822 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை. கடைசி சில மணி நேரம் மட்டுமே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். அனைத்து வகை மாறுதல் பெற விருப்பமுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களும் எமிஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.