தமிழகத்தில்  ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஓராண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கப்படாததால் பலரும் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் தெரிவிக்கையில், மகளிர் உரிமைத் தொகை பெற பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்திருந்ததால், குறிப்பிட்ட காலத்திற்கு குடும்ப அட்டை விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.