தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் காகிதம் இல்லா பள்ளி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று அவை தலைவர் அப்பாவும் கூறியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே விரைவில் காகிதம் இல்லா பள்ளி தமிழகத்தில் உருவாக்கப்படும் என இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த அறிவிப்பு தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.