விஜய மக்கள் இயக்கம் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்கப்படவுள்ள இரவு நேர பாடசாலை இன்று  செயல்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பாடசாலைக்கு தளபதி விஜய் பயிலகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  பெருந்தலைவர் காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளில் இந்த பயிலகம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் பயிலகம்’ சென்னை கொடுங்கையூரில் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற இரவு நேர பாடசாலையை தொடங்க உள்ளார். அந்தவகையில் இன்று காமராஜர் பிறந்தநாளையொட்டி, முதற்கட்டமாக சென்னை கொடுங்கையூரில் முதல் இரவு நேர பாடசாலையை இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.