ஓலா, யூபர் வாகனங்களில் ஓட்டுநர் புக்கிங் கேன்சல் செய்தால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்த சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மயில்வாகனன், டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளை ஏற்க மறுத்தாலோ அல்லது புக்கிங்கை கேன்சல் செய்தாலோ புகார் தெரிவிக்கலாம் என்றார்.

ஓட்டுநர்கள் புக்கிங் கேன்சல் செய்தால் அருகில் உள்ள போக்குவரத்து காவல்துறையிடமோ  அல்லது காவல் சேவை கட்டணமில்லா எண் 1800 425 5430 தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.