கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளின் மூலம், இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நாள்தோறும் ரூ.50 லட்சம் முதல் 75 லட்சம் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி சீட்டு விற்கப்படுகிறது. இந்த தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த கேரளா லாட்டரி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கேரள அரசு ஒப்புக்கொண்டதால் தினமும் ஒரு கோடீஸ்வரர் கேரளாவில் உருவாகிவிடுவார்கள் என கூறப்பபடுகிறது.