மெட்ரோ நிர்வாகம் எஸ்பிஐ வங்கியோடு இணைந்து சிங்கார சென்னை அட்டை என்ற புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த சிங்கார சென்னை அடையாள அட்டையின் மூலமாக டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை உள்ளிட்ட அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணம் செய்து கொள்ளலாம். தற்போது முதற்கட்டமாக கோயம்பேடு, சென்ட்ரல், விமான நிலையம், கிண்டி, திருமங்கலம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர் ஆகிய ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அட்டையானது கூடிய விரைவில் பேருந்து, புறநகர் ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளுக்காகவும் கொண்டுவரப்படும் என்றும் அனைத்தும் மெட்ரோ நிலையங்களிலும் சிங்கார சென்னை அட்டையை பெறுவதற்கு படிவத்தை பூர்த்தி செய்த சில நிமிடங்களிலேயே அதற்கான அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.