தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர்.

எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு மட்டும்தான் 1/2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும். மேலும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாது என்று அவர் கூறியுள்ளார்.