ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த மனோஜ் என்ற 18 வயது இளைஞர் போதை ஊசி போட்டபடி தள்ளாடி வந்ததை பார்த்த போலீசார் அவரை சோதனை செய்த போது கட்டு கட்டாக போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் முன்னாள் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.