தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என்றும் நகர்ப்புறங்களில் அதுவும் கிடையாது எனவும் கூறினார். இது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.