உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் பல்வேறு வசதிகளையும் செய்து வருவது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் எண் கட்டாயம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முன்பு ஆன்லைன் தரிசன டிக்கெட்டை பெற வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ரேஷன் அட்டை போன்றவற்றை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இனி இவைகளை பயன்படுத்தி பெற முடியாது எனவும் ஆதார் இருந்தால் மட்டுமே தரிசன டிக்கெட் பெற முடியும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.