புதுச்சேரி மாநிலத்தின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார் . பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இந்த அறிவிப்பு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது.