சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities, Denotified Tribes 2 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டதை ஆய்வு செய்து, ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.