சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற அச்சம் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்து விட்டதாக இபிஎஸ் கூறியுள்ளார். சேலத்தில் இது குறித்து பேசிய அவர், இதுவரை சிறுபான்மை மக்களுக்கு திமுக தான் அரணாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வந்தார். NDA கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு தான் இஸ்லாமியர்கள் குறித்த நினைவே திமுகவுக்கு வருகின்றது. அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது, சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்று முதல்வர் தற்போது அச்சப்படுகிறார் என இ பி எஸ் விமர்சித்துள்ளார்.