திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதாவது இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.