சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே விலங்குகளின் வீடியோக்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பார்க்கின்றனர். நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு என்பது மட்டுமல்லாமல் அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஒரு நாய் குழாய் அருகில் வந்து அதை எப்படி திறப்பது என்பது புரியாமல் நிற்கிறது. தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த நாயை ஒரு பெண்ணும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் அந்த நாய்க்கு உதவ குழாயை திறந்து விடுகிறார். அந்தப் பெண்ணை பார்த்ததும் நாய் பயந்து பின்னே செல்லும் நிலையில் அந்த நாய் தன்னை பார்த்து அச்சப்படுவதை புரிந்து கொள்ளும் பெண் பின்னே நகர்ந்து செல்கிறார். அதன் பிறகு குழாய் அருகே வந்து நாய் தண்ணீர் குடித்து தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொள்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Give இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@give_india)