இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு பூனையின் வீடியோ பலரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது வீடியோவில் பெரிய தொட்டி ஒன்றில் பூனை விழுந்து விடுகிறது.

காப்பாற்ற யாரும் இல்லாததால் தானே முயன்று அந்தத் தொட்டியில் இருந்தே வெளியே வர முயற்சி செய்கிறது. உன்னால் முடிந்த அளவிற்கு ஜம்ப் செய்து எப்படியாவது தொட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பூனை முயற்சி செய்யும் நிலையில் அதனால் தாண்ட முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொட்டியில் இருந்து எப்படியாவது வெளியே வந்து விட வேண்டும் என்று பூனை நினைக்கின்றது. இறுதியாக தொட்டியின் மீது ஏறுவதற்கு முன்பு யாரோ ஒருவர் அந்தப் பூனையை பார்த்து வெளியேறுவதற்கே ஏணி கொடுக்கின்றார். ஆனால் பூனை துளியும் அதனை கண்டு கொள்ளாமல் என்னால் முடியும் தானே தாண்டிக் கொள்கிறேன் என்று மீண்டும் முயற்சி செய்து அசால்டாக வெளியே வருகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.