வங்கிகளில் அதிக ஊழியர்களை  நியமனம் செய்யக் கோரி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) செப்டம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை நாடு  முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வரை வேலைநிறுத்தம் செய்ய ப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2024 ஜனவரி 2 முதல் 6 வரை பல்வேறு மாநிலங்களிலும், ஜனவரி 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் அகில இந்திய அளவிலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று ஏஐபிஇஏ கூறியுள்ளது.