லண்டனில் தெற்கு பகுதியில் உள்ள கிராய்டான் பகுதியில் 19 வயது இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள் அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இறந்து போன பெண் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் அவர் சமீபத்தில் தான் இங்கிலாந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.