ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று நஸ்ருள்ள என்பவரை திருமணம் செய்தவர் அஞ்சு என்கிற பாத்திமா. இவரது இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோன்று அஞ்சுவின் கணவரும் பலமுறை மீண்டும் தங்களிடம் திரும்பி வந்து விடுமாறு கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதனை அஞ்சு என்கிற பாத்திமா பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் அஞ்சு தனது குழந்தைகளை பார்க்க இந்தியா வரவிருப்பதாகவும் தனது மகன் மற்றும் மகளை பார்த்துவிட்டு மீண்டும் அவர் பாகிஸ்தானுக்கு சென்று விடுவார் என்றும் கூறப்படுகிறது.