அக்டோபர் 2022 இலிருந்து செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தை கணக்கில் கொண்டு மேற்கொண்ட ஆய்வின்படி 42,000 இந்தியர்கள் மெக்ஸிகோ எல்லை பகுதி வழியாக சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் புகுந்துள்ளதாக அந்நாட்டு சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம்  தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் 33,800 பேர் தங்களுக்கென்று ஒரு குடும்பம் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 700 பேர் 18 வயதுக்கு கீழ் பட்டவர்கள் என்றும் 7250 பேர் குடும்பத்தை விட்டு பிரிந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.