காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்த உதவிகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமினுடன் அதிபர் பைடன் தொலைபேசியில் கலந்துரையாடிய போது காசாவில் தவிக்கும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் தங்கள் குடிமக்களை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பைடன் அவர்கள் அடிக்கோடிட்டு காட்டியதாக வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.