இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் ஒரே இரவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளரான ஹகாரி கூறுகையில் “இதனை உலகம் நினைவு கூற வேண்டும். சிறுவர், சிறுமிகள், வயது முதிர்ந்தோர், பெண்கள், ஆண்கள், கைக்குழந்தைகள் என பலரை ஹமாஸ் அமைப்பு பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவரையும் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதனை முடிக்கும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்” எனக் கூறியுள்ளார்