குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என யாரையும் தன்னிச்சையாக எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ரிஜிஸ்டர் ஆபிஸில் சார்பதிவாளரின் உறவினர்கள், நண்பர்கள் என்ற போர்வையில் தரகர்கள் நடமாட்டத்தை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வுகள் மூலமாக கண்காணிக்க வேண்டும் என்றும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்