பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது‌. இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, மீண்டும் ஒரு சர்ச்சையான வார்த்தையை உபயோகித்துள்ளார். தான் பயன்படுத்திய வார்த்தை கொங்கு நாட்டின் வழக்காடு மொழி மட்டுமே.

அது தவறான வார்த்தை கிடையாது. எங்க குடும்பத்தில் சகஜமாக உபயோகிக்கும் வார்த்தை அது. இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என பேசியுள்ளது சர்ச்சையை மீண்டும் கிளப்பி உள்ளது. இதில், வழக்காடு மொழி என்பது நீதிமன்றத்தில் வாதிடும் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.