இன்றைய காலகட்டத்தில் திருமண ஜோடிகள் பலரும் திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பிறகும் போட்டோ சூட் எடுத்து வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு போலீஸ் ஜோடி நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த தம்பதிகள் இரண்டு பேரும் போலிஸ் அதிகாரிகளாக உள்ள நிலையில் போட்டோ சூட் நடத்தும் போது அவர்கள் இருவரும் போலீஸ் சீருடைகள் இருக்கின்றனர்.

மேலும் ஒரு திரைப்படத்தின் காட்சியை போல எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் காவல் நிலையத்திற்குள் நுழைவதையும் காண முடிகிறது. அது மட்டுமல்லாமல் ஹைதராபாத் நகரம் முழுவதும் பல அழகிய இடங்களில் இந்த தம்பதியர் பாடி நடனம் ஆடுகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.