இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ.50 ஆயிரம், பலத்த காயமடைவோருக்கு ரூ. 25 ஆயிரம், லேசான காயமடைவோருக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 10 மடங்கு அதிகரித்து, மரணங்களுக்கு ரூ.5 லட்சம், பலத்த காயமடைவோருக்கு ரூ. 2.50 லட்சம், லேசான காயமடைவோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி இதைப்போல ரெயில்களில் நடைபெறும் பயங்கரவாதம், கொள்ளை சம்பவங்கள் மற்றும் வன்முறை நிகழ்வுகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.