சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து முதியோர் உதவித் தொகையை வழங்கினார்.

இந்நிலையில் அம்மா மறைவுக்குப் பின் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை கிடைக்கப்பெற வழியற்றத்தை கேள்விப்பட்டு நான் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முழுவதும் தகுதியான 5 லட்சம் முதியவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வழங்கினேன். அதன் மூலமாக சுமார் 4 லட்சம் முதியோர்களுக்கு அம்மா அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது. ஆனால் தி.மு.க அரசு முதியோர் உதவித் தொகையை நிறுத்தி வருவதாகவும் அ.தி.மு.க-வின் திட்டங்களை நிறுத்தி வைத்ததே திராவிடமாடல்  ஆட்சியின் சாதனை எனவும் குற்றச்சாட்டியுள்ளார்.