நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது பாஜக எம்பி அஜய் பட் பேசிய பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கேலியையும் கிளப்பியுள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூகச் சிக்கல்கள் குறித்துப் பேசும்போது அவர் ஒரு விசித்திரமான தீர்வை முன்வைத்தார்.

​அவர் பேசுகையில், “உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா? மாடு பால் தரவில்லையா? பையன் வழிதவறிப் போய்விட்டானா? பெண்ணிற்குத் திருமணம் ஆகவில்லையா? அல்லது கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா? கவலையை விடுங்கள்… ‘ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்’ என்று சொல்லுங்கள், எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்” என்று கூறினார். அவர் இதைச் சொல்லும்போது அங்கிருந்த மற்ற பாஜக எம்பிக்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.