சுதந்திரத்தினமான நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அதன்பின் பேசிய அவர் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அந்தவகையில் நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட வாங்கப்படும் வங்கி கடனின் வட்டியில் சலுகை அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் வாடகை வீடுகளில் வசிக்கும் நகர்ப்புற நடுத்தர வகுப்பினருக்காக தொடங்கப்பட உள்ள இந்த புதிய திட்டத்தால் 31% குடும்பங்கள் பயனடையுமென கூறப்படுகிறது. வீட்டுரிமை முறையில் நிலவிவரும் வேறுபாட்டை களைய இத்திட்டம் உதவுமென நகர்ப்புற மேம்பாட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர்.