பொதுவாகவே நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்துமே ஆண்கள் மற்றும் பெண்கள் சமமான விதத்தில் இருப்பார்கள். ஆனால் கென்யா நாட்டின் தலைநகரான நேரோப்பியில் பெண்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் உமோஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவானது. கடந்த 1990 ஆம் வருடம் சம்பூர் இனத்தைச் சேர்ந்த பெண்களை பிரிட்டன் ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துள்ளார்கள். இதனால் ஆவேசமடைந்த 40 குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இங்கு தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மணிமாலைகளை விற்று வருமானம் ஈட்டி வருகிறார்கள்.