அமெரிக்காவின் ஃப்ளோரிட மாகாணத்தில் 32 வயது பெண் சுற்றுலா பயணி ஒருவர் சாலை விதிகளை மீறி சாலையின் குறுக்கே சென்றுள்ளார். இதனைப் பார்த்த போக்குவரத்து காவல் அதிகாரி நிக்கோலஸ் அந்த பெண்ணை அழைத்து தனது காரில் ஏறுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்ததால் வழக்கு போடாமல் விட வேண்டும் என்றால் காரில் ஏறுமாறு கூறியுள்ளார். இதனால் தயங்கியபடி அந்த பெண் காரில் ஏறிய பிறகு பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அந்தப் பெண் தங்கி இருந்த ஹோட்டலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். தவறு செய்தது காவல் அதிகாரி என்பதால் அந்த பெண் சுற்றுலா பயணி யாரிடமும் இது குறித்து கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கும் அவரது நண்பருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதலில் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த பெண் தனக்கு காவல் அதிகாரியால் நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரிகள் தலைமறைவாக இருந்த நிக்கோலசை கைது செய்தனர்.