காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படும் ஆக்ரோஷமான சிங்கத்தின் முன்னே மாட்டிக் கொள்ளும் போது, அதனிடம் இருந்து தப்பிக்க நமது முதுகைக் காட்டி ஓடினால் மட்டுமே சிங்கம் தாக்குமா அல்லது நேருக்கு நேர் நின்றாலும் ஆபத்தா என்ற விவாதத்தை எழுப்பும் வகையில் தற்பொழுது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி நெட்டிசன்களை வாயடைத்துப் போகச் செய்துள்ளது.
பொதுவாகச் சிங்கங்கள் தங்களது இரையைத் தந்திரமாகப் பதுங்கித் தாக்கக் கூடிய வேட்டை விலங்குகள் என்பதால், மனிதர்கள் பயந்து நடுங்கி முதுகைக் காட்டி ஓடும் பொழுது அவற்றின் வேட்டை குணம் சட்டென்று தூண்டப்பட்டு எளிதாகத் தாக்கி விடுகின்றன என்றும், மாறாக எவ்வித பதற்றமும் இன்றி நேருக்கு நேர் நின்று நெஞ்சை நிமிர்த்திச் சிங்கத்தின் கண்களைப் பார்த்து சத்தமிடும் பொழுது அது மனிதனை ஒரு ஆபத்தான எதிரியாகக் கருதித் தாக்குவதற்குத் தயங்கிப் பின்வாங்கி விடுகிறது என்றும் வனவிலங்கு நிபுணர்கள் விவரிக்கின்றனர்.
View this post on Instagram
“>
ஆபத்தான வேளையில் சிங்கத்தின் தாக்குதலில் இருந்து எவ்வாறு தந்திரமாகத் தப்பிப்பது என்பதைத் துல்லியமாக விளக்கும் இந்த அசாத்திய வீடியோ தற்பொழுது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
