தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் குடும்ப தலைவிகள் ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கில் அறிக்கையாகிய நான்கு ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரத்து 825 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இந்த விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன