மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிலையில் இதனை முன்னிட்டு, அதில் பங்கேற்பவர்களுடைய வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

காலை 3.40 மணிக்கு சைதாப்பேட்டையிலும், 3.50 மணிக்கு சின்னமலையிலும், 3.55 மணிக்கு கிண்டி, 4 மணிக்கு விமான நிலையம், 4 மணிக்கு செயின்ட் தாமஸ் மவுண்ட், 4 மணிக்கு எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ஆகிய நிலையங்களில் இருந்து ரயில் சேவை வழங்கப்படும்.