கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நொய்யல் பகுதியில் இருக்கும் வாய்க்கால் மேடு ஆற்றங்கரையோரம் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் துரைசாமியின் மகன் விக்னேஷ் அந்த பகுதியில் தனது தந்தையை தேடி பார்த்தார். ஆனாலும் துரைசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நொய்யல் ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில் துரைசாமியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.