செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவண்ணாமலையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமரைக்கண்ணன் மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த தீன தயாளன் என்பவர் ஓட்டி வந்த வேன் தாமரைக்கண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தாமரைக்கண்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி கைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.