மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷனின் உதவியாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரானதால் சாக்ஷி மாலிக் கதறி அழுதார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பிரிஜ் பூஷன் மீது வீராங்கனைகள் புகார் அளித்தனர். ஏற்கனவே பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் 40 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவரை நியமிக்க வீரர்கள் கோரிய நிலையில், அது நிராகரிக்கப்பட்டது
சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ஆனதால் மல்யுத்தத்தை விட்டே நான் வெளியேறுகிறேன் என சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.