சமீப காலமாகவே இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அதன்படி 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்க மகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது சிறுமி நேற்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அண்மைக்காலமாக இளம் வயதினர் அதிக அளவில் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.